நடிகை டாப்சி பண்ணு நடிப்பில் வெளியாக உள்ள அஸ்ஸி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் நீதிக்கான போராட்டம் தொடர்பான வழக்கை நடத்தும் வழக்கறிஞர் குறித்த கதையை மையமாக கொண்டு அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாகியுள்ள அஸ்ஸி என்கிற இந்தி திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை த தடுக்கும்படி அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் கேசட்டஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அஸ்ஸி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.