Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Mar 29, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchHigh Court Judgments

சீமைக்கருவேல மரங்களுக்கு முற்றுப்புள்ளி: 3 மாதங்களில் முழுமையாக அகற்ற தமிழக அரசு உறுதி!

Admin
Last updated: March 7, 2026 5:54 am
Admin
Share
SHARE

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அழித்து, சுற்றுச்சூழலை மீட்டெடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் வனப்பகுதிகள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

நீண்ட கால சட்டப் போராட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல தன்னார்வலர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு மதுரை கிளை மற்றும் சென்னை முதன்மை அமர்வு எனப் பல நிலைகளை கடந்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை விசாரணைக்கு வந்தது. இதில் வைகோ அவர்கள் நேரிடையாக ஆஜராகி வாதாடினார்.

அரசின் அதிரடி திட்டம் மற்றும் சலுகைகள்

நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மரங்களை அகற்றும் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் தலைமை அதிகாரியாக செயல்படுவார்கள்.
  • வருவாய் மற்றும் மறுசுழற்சி: வெட்டப்படும் மரங்கள் டன் ஒன்றுக்கு ₹1,000 முதல் ₹4,000 வரை ஏலம் விடப்படும். இந்த வருவாய் முழுவதும் மீண்டும் நாட்டு மரங்களை நட்டு வளர்க்கப் பயன்படுத்தப்படும்.
  • மாணவர்களுக்கு சலுகை: நாட்டு மரங்களை வளர்க்கும் பணிகளில் ஈடுபடும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பின் போது சமூக சேவையாக கருதப்படும்.

வைகோவின் வாதம்

விசாரணையின் போது வாதாடிய வைகோ, “கேரளாவில் இத்தகைய மரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் இவை விவசாய நிலங்களையும் தரிசு நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளன. தலைமை வனத்துறை செயலர் தலைமையிலான குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே இந்த மரங்களை முழுமையாக அகற்ற முடியும்” என்று வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு

அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மரங்கள் முழுமையாக அகற்றப்படும் வரை நீதிமன்றம் இச்செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் எனத் தெரிவித்தனர். மேலும், மாநில அரசு நிலங்கள் மட்டுமின்றி, மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே நிலங்கள் மற்றும் ரயில் பாதைகளில் உள்ள கருவேல மரங்களையும் அகற்ற உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் உறுதியளித்தனர்.

சீமைக்கருவேல மரங்களின் பாதிப்பு என்ன?

சீமைக்கருவேல மரம் என்பது ஒரு அந்நிய வகை மரம். இது மற்ற நாட்டு மரங்களை வளர விடாமல் தடுப்பதுடன், நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி நிலத்தை வறண்டதாக மாற்றிவிடும். காற்றில் ஆக்சிஜனை விட கார்பன்-டை-ஆக்சைடை அதிகமாக வெளியேற்றும் தன்மை கொண்டதால், இது சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடாகக் கருதப்படுகிறது.

TAGGED:judgementMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

“அரசிடம் அனுமதி பெற வேண்டாமா?” – பொன்முடி மீதான சமயப் பூசல் வழக்கு: விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2 Min Read
Chennai Bench

“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியுமா?” – ஜான் டேவிட் முதல் பல ஆயுள் கைதிகள் வரை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி விசாரணை!

2 Min Read
Chennai BenchDistrict Court UpdatesMadras High Court

காசோலை மோசடி வழக்கு – கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம்

2 Min Read
Chennai BenchTamil Nadu Law

திருமண நிதியுதவித் திட்டம்: உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?