Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Apr 11, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை என்ன?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

Admin
Last updated: April 6, 2026 4:58 pm
Admin
Share
SHARE

பொதுமக்களைப் பாதிக்கும் தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கதிர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மனுதாரரின் முக்கியக் குற்றச்சாட்டுகள்

மனுதாரர் தனது மனுவில் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் விதிகளை மீறி மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்புவோர் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மோட்டார் வாகன சட்டத்தின்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை (Permit) ரத்து செய்ய சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து வழிகாட்டுதல்களைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகள் இதுவரை முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரரின் கோரிக்கைகள்

தமிழகத்தில் தனியார் பேருந்து வழித்தடங்களுக்கு ஏற்ப சரியான கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் முன்பதிவு தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு

இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. தமிழகப் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது தனியார் பேருந்து கட்டணங்கள் விமானக் கட்டணத்திற்கு இணையாக உயர்த்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வரும் வேளையில், நீதிமன்றத்தின் இந்த தலையீடு அவர்களுக்குப் பெரிய நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சட்டக் குறிப்பு - போக்குவரத்துத் துறை விதிகள்

தனியார் ஆம்னி பேருந்துகள் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. அவை மாநிலப் போக்குவரத்து ஆணையத்தால் (STA) அங்கீகரிக்கப்பட்ட கட்டண விகிதங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதனை மீறும் பேருந்துகளைப் பொதுமக்கள் 1800 425 1909 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

நகராட்சி கடை ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரிய மனு – மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!

1 Min Read
Madurai Bench

மடப்புரம் காவலாளி மரண வழக்கு – CBI பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read
Madras High CourtMadurai Bench

“மாவட்ட நூலக அலுவலர் அரசாணை செல்லும்”

2 Min Read
Madurai Bench

“அரசு ஊழியர்கள் விருப்பம்போல இடமாறுதல் கோர முடியாது!” – மதுரை நீதிமன்றம்!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?