Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 17, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்தாலும் குழந்தைக்குக் குடியுரிமை உண்டு” – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Admin
Last updated: April 15, 2026 11:47 am
Admin
Share
SHARE

இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு, பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் குடியுரிமை பெற உரிமை உண்டு என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பான விண்ணப்பத்தை 4 மாதங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லிங்கம்மாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நான் விருதுநகர் மாவட்டம் அம்மையார்பட்டியில் பிறந்த இந்தியக் குடிமகள். நான் இலங்கை அகதியான நலீம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனது இரு மகன்களும் இந்தியாவிலேயே பிறந்தவர்கள். அவர்களுக்கு 1955-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டப்படி இந்தியக் குடியுரிமை வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

நீதிமன்ற விசாரணை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, குடியுரிமைச் சட்டத்தின் நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டி குழந்தைகள் இருவரும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ்கள் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்து, குழந்தையும் இந்தியாவில் பிறந்திருந்தால், அந்தக் குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை பெற முழு உரிமை உண்டு. குழந்தைகளின் பிறப்பு இலங்கையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பான விண்ணப்பம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், நிலுவையில் உள்ள மனுதாரரின் விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். உரிய விசாரணைக்குப் பிறகு, சட்டப்படி தகுந்த உத்தரவை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப் பெற்றதிலிருந்து நான்கு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

முக்கியத்துவம்: இலங்கை அகதிகள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இடையே பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை குறித்த சட்டச் சிக்கல்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மதக் கலவரத்தைத் தூண்டியவருக்கு ஜாமீனா?” – மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Admin
2 Min Read

“விவசாய நிலங்களுக்கு கூடுதல் பத்திரப்பதிவு கட்டணம்”: பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
2 Min Read

“சோஹோ நிறுவன நிதி பாஜக வேட்பாளர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா?” – ஸ்ரீதர் வேம்புவிடம் விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Admin
2 Min Read

“முதலமைச்சரின் செயலாளர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

₹76 லட்சம் மோசடி வழக்கு: அமைச்சர் PTR-ன் முன்னாள் உதவியாளர் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

1 Min Read
Madurai Bench

“தெருப் பெயர்களை இணையதளத்தில் சேர்க்க மாமன்றத் தீர்மானம் தேவையில்லை” – மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 Min Read
Madurai Bench

மதுரை SP அலுவலகத்தை அகற்ற கோரிய மனு – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

1 Min Read
Madurai Bench

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குத் தடையில்லை” – தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?