Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Wednesday, May 27, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“அரசிடம் அனுமதி பெற வேண்டாமா?” – பொன்முடி மீதான சமயப் பூசல் வழக்கு: விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Admin
Last updated: March 26, 2026 4:06 pm
Admin
Share
SHARE

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் உத்தரவையும் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி சைவ, வைணவ சம்யங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசியது தொடர்பாகப் புகார் எழுந்தது. பாஜக-வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார்.

மத உணர்வுகளைப் புண்படுத்துதல், சமயங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடி தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.

சம்மன் மற்றும் பொன்முடியின் எதிர்ப்பு

இந்த வழக்கு எம்பி – எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. புகாரை விசாரித்த நீதிபதி சவுந்திர பாண்டியன், இதில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி பொன்முடி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.

இந்த சம்மனை எதிர்த்து பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, “மத ரீதியான வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முன்பு முறைப்படி அரசிடம் அனுமதி (Sanction) பெற வேண்டும்; ஆனால் மாஜிஸ்திரேட் அதனைப் பின்பற்றவில்லை” என வாதிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதியரசர் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா பொன்முடி மீதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த வழக்கு குறித்துப் புகார்தாரர் உமா ஆனந்தன் அடுத்த 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்றம் அனுப்பிய சம்மன் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

'அரசு அனுமதி' (Sanction) ஏன் அவசியம்?

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (CrPC), ஒரு பொது ஊழியர் அல்லது அரசியல்வாதி மீது மத ரீதியான வெறுப்புப் பேச்சு (Hate Speech) தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றால், அந்தந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். தேவையற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட புகார்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த விதிமுறை உள்ளது. இந்த வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதே பொன்முடி தரப்பின் முக்கிய வாதமாகும்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

“4.5 லிட்டர் விலக்கு புதுச்சேரி மதுவிற்குப் பொருந்தாது” – உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டவட்ட விளக்கம்; நாளை விசாரணை!

1 Min Read
Chennai Bench

தேர்தல் விதிமீறல் வழக்கு: ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பெரிய நிம்மதி!

2 Min Read
Chennai BenchDistrict Court UpdatesMadras High Court

காசோலை மோசடி வழக்கு – கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம்

2 Min Read
Chennai BenchMadras High Court

நூறு ஆண்டுகள் பழமையான கோவில் மண்டபம் வாஸ்துபடி அமையவில்லையா? – உயர் நீதிமன்றம் கேள்வி

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?