Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 17, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“பழைய சீவரம் மாணவர்கள் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை!” – தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

Admin
Last updated: March 31, 2026 5:05 pm
Admin
Share
SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, உள்ளூர் போலீசாரிடமிருந்து சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தையே உலுக்கிய இச்சம்பவத்தின் விவரங்கள்:

வாலாஜாபாத் அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த சத்ரியன், விஷ்வா மற்றும் பரத்வாஜ் ஆகிய மூன்று மாணவர்கள் திடீரென மாயமானார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உத்தரமேரூர் அருகே உள்ள விழுதுவாடி கிராம ஏரியில் மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் உத்தரமேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பெற்றோரின் குமுறல்

மாணவர்களின் பெற்றோர்களான எழுமலை, முனியாண்டி மற்றும் லோகேஸ்வரி தாக்கல் செய்துள்ள மனுவில் மாணவர்களின் உடலில் தீக்காயங்கள் போன்ற அடையாளங்கள் இருந்தன. ஆனால், உள்ளூர் போலீசார் அதனை முறையாகப் புலனாய்வு செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தத் திட்டமிட்ட கொலை நடந்திருக்கலாம் எனப் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

ஓராண்டு கடந்தும் உள்ளூர் போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை; வெளிப்படைத்தன்மை இல்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனுவில் கோரப்பட்டுள்ள முக்கிய நிவாரணங்கள்

மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் உள்ளூர் போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லாததால், வழக்கை உடனடியாகச் சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்ற வேண்டும். இதனை ஒரு கொலை வழக்காகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழும் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் அரசு இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும். என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாகத் தமிழக அரசு, தமிழகக் காவல்துறைத் தலைவர் (DGP) மற்றும் சிபிசிஐடி தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர். தற்போதைய போலீஸ் விசாரணையின் நிலை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையின் விவரங்களைத் தாக்கல் செய்ய ஆணையிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஏன் சிபிசிஐடி விசாரணை கோரப்படுகிறது?

உள்ளூர் காவல்துறையினர் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவோ அல்லது விசாரணையில் தொய்வு இருப்பதாகவோ பாதிக்கப்பட்டவர்கள் கருதினால், உயர்மட்டப் புலனாய்வு அமைப்பான சிபிசிஐடி (Crime Branch-Criminal Investigation Department) விசாரணைக்கு கோரிக்கை விடுப்பார்கள். இது வழக்கை நடுநிலையாகவும், நுணுக்கமாகவும் விசாரிக்க உதவும்.
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்டந்தோறும் தனி அதிகாரி”: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
2 Min Read

“இன்னமும் தனித்தனி மயானங்களா?” – நீர்நிலை ஆக்கிரமிப்பு மயானத்திற்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் வேதனை!

Admin
2 Min Read

“அதே நபர் மீண்டும் புகார் அளித்ததில் உள்நோக்கம் என்ன?” – தொழிலதிபர் கைது விவகாரத்தில் திருச்சி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

Admin
2 Min Read

“மதக் கலவரத்தைத் தூண்டியவருக்கு ஜாமீனா?” – மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

எம்.பி. நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார்: சிபிஐ ரகசிய அறிக்கை தாக்கல் – உயர் நீதிமன்றம் அதிரடி!

2 Min Read
Chennai BenchMadras High Court

வேந்தரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலை வழக்கு

1 Min Read
Chennai Bench

“மாற்றுத்திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது!” – சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

2 Min Read
Chennai Bench

தேர்தல் பணிமனைகள் நிரந்தரக் கட்டிடங்களில் மட்டுமே இருக்க வேண்டுமா? – திமுக வேட்பாளர் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?